Wednesday 16 June 2010

சிரிப்பே சிறந்த மருந்து.. சிரிப்பு ஸ்பெஷல்

வணக்கம் நண்பர்களே...

இது முழுக்க முழுக்க சிரிப்பு தொகுப்பு.. உங்களுக்காக.. சிரிப்பு ஸ்பெஷல்....!!
---------------------------
மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...!!
------------------------
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனிமே நானே சமைக்கிறேன்... எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்கும்மா சம்பளம்...? நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
------------------------
மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
கணவன்: அடப்பாவி...! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
--------------------------------
புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்குச் செல்கிறான்.
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
-----------------------------------
நர்ஸ்-1 : நம்ம டாக்டரோட ஞாபகமறதி நோய் குணமான சேதி கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க!
நர்ஸ்-2 : எதுக்கு?
நர்ஸ்-1 : அவர் நெஜமாவே டாக்டர் இல்லையாம், வக்கீலாம்!
-------------------------------------
ஒருவர் : என்னோட இராசி, நட்சத்திரம் எல்லாத்தையும் கேட்டுட்டு, வீட்டுக்குள்ள ஜோசியர் போறாரே, எதுக்கு?
மற்றவர் : கொஞ்சம் அவசரப்படாம இருங்க.. பேப்பரைப் படிச்சிட்டு வந்து உங்களுக்கு பலன் சொல்வாரு!
--------------------------------------------
ஆள் -1 :ரொம்பக் கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டிட்டேன், ஆனா மனசுக்குள்ள ரொம்ப பயமா இருக்கு!
ஆள்-2 : எதுக்கு பயம்? கடன் அதிகமாயிடுச்சா?
ஆள் -1 :இல்ல.. நிலம்தான் யாருடையதுன்னு தெரியல!
-----------------------------------------------
இளைஞன்: நீண்ட நாள் வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
நண்பன்: திருமணம் செய்துகொள்.
இளைஞன்: திருமணம் அதற்கு உதவி செய்யுமா?
நண்பன்: இல்லை, இந்த மாதிரியான எண்ணங்கள் வாழ்நாளில் உனக்குத் திரும்ப வரவே வராது.
---------------------------------------
கணவன்: ஏன் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் இடம் இல்லை?
வக்கீல்: ஒரு குற்றத்திற்காக யாரும் இரண்டு முறை தண்டிக்கப்படுவதில்லை!
---------------------------------------------------
திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:
“சுதந்திரதின வாழ்த்துக்கள்!!!”
(இது இருபாலருக்கும் பொருந்துமோ????)
--------------------------------------------
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.


கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாகும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா.. இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!
----------------------------------------------------
சரி நண்பர்களே... மீண்டும் உங்களை இதே போல் சிரிப்பு தொகுப்புடன் வெகு விரைவில் காண்பேன்.

நன்றி... நன்றி... நன்றி... உங்களிடமிருந்து நன்றி கூறி விடை பெறுவது உங்கள்..உங்கள்.. உங்கள்.. குரோம்பேட் காசிராமன்........

-- வர்ட்டா............

6 comments:

bachu said...

kasiji, Ungal Pudhiya muyarchikku yenadhu vazhthukkal. Ennudaiya thodar karuthukaludan...

Sreeganth said...

intha joke yellam veetula padichi kaatuvingala? appuram soru thanni kooda kidaikkathu.

ithukku than solrathu, avasarappattu thappu (marriage) senjittu nithanama varuthappadarathunnu.

Anyway, varuthappadatha vaalibar sangathilae innomuru appaavi!

btw, the jokes are really nice (particularly the last one) and look forward to have more!

ChromepetKasi said...

Dear Badri ji,
Tanx for your comment.

ChromepetKasi said...

Dear Sree,
Mana kumural of a Gentle men (which I heard) :

Before marriage my life was full of tamaashu.., but...
After marriage my life became Comedy..!!

Thanks for your comment.

LINO GEORGE said...

hahaha

LINO GEORGE said...

hahahahahase